Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 17 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கானது கோட்டா மீது இருக்கும் பயத்தை வெளிக்காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு எவ்வித சதி முயற்சிகளும் இல்லையென்றும், எல்லா சந்தர்ப்பங்களுக்கும் தயாராகவிருப்பதாக மஹிந்த தெரிவித்துள்ளார்.
இன்று பெல்லன்வில விகாரையில் இடம்பெற்ற தலைக்கு எண்ணெய்ப் பூசும் புதுவருட பாராம்பரிய நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே மேற்கண்டவாறு மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களிலும் வெற்றிப் பெறுவதாகத் தெரிவித்துள்ள மஹிந்த, சகல கட்சிகளும் ஒன்றிணைவதற்கு தேவையான காலம் வரும் போது, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று குடிநீர், மின் துண்டிப்பு காரணமாக, மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு ஒருவர், இருவர் இல்லாமல் முழு அமைச்சரவையும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago