2025 ஜூன் 11, புதன்கிழமை

’கோட்டாபய ஆட்சியில் தமிழர்களுக்கு விமோசனம் இல்லை’

Freelancer   / 2022 மே 19 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஷ் 

தமிழர்களின் இரத்தக்கறை படிந்த ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்‌ஷ ஆட்சியில் இருக்கும் வரை தமிழ் மக்களுக்கு  எந்த விமோசனமும் கிடைக்காது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. யான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (18)  இடம்பெற்ற, நாட்டில் ஏற்பட்ட வன்முறைகளை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கூட்டமைப்பை சேர்ந்த ஜோசப் பரராஜசிங்கம்,ரவிராஜ்,சிவநேசன்,சந்திரநேரு ஆகிய எம்.பி.க்களே இதே அரசாங்கத்தின் காலத்தில் படுகொலை செய்யப்பட்டார்கள்.அவர்களுக்கான நீதி கூட இன்றுவரை கிடைக்கவில்லை. 

அதுமட்டுமல்ல இந்த அரசாங்கத்தில் தான் முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். அவ்வாறு படுகொலை செய்யப்பட்ட இன்றைய  நாளில் நான் அவ்வாறு கொல்லப்பட்ட எமது உறவுகளுக்கு அனுதாபத்தையும் அஞ்சலியையும் இங்கு தெரிவிக்கின்றேன்.

தமிழர்களின் இரத்தக்கறை படிந்த   கோட்டாபய ராஜபக்‌ஷ
வே இன்று  ஜனாதிபதியாக  இருக்கின்றார். அவரது ஆட்சியில் இருக்கும்வரை தமிழ் மக்களுக்கு  எந்த விமோசனமும் கிடைக்காது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10