2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கோட்டாவின் கடவுச்சீட்டு, அடையாள அட்டை ஆவணங்கள் ஒப்படைப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஷவின் தேசிய் அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு தொடர்பான அனைத்து சட்டரீதியான ஆவணங்களும் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் நேற்று (01) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு - குடியகல்வு  திணைக்களம் மற்றும் ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோட்டாபய ராஜபக்ஷவிடம் சட்டரீதியான தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு காணப்பட்டால் அது தொடர்பான சகல தகவல்களையும்  நீதிமன்றில் இன்று (02) முன்வைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஊடாக கிடைக்கப்பட்ட அறிவுறுத்தலை அடுத்து, குறித்த ஆவணங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் நேற்று (01) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் எமது சகோதர பத்திரிகையான “லங்காதீப”வுக்கு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .