2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கோட்டாவுக்கு அழைப்பில்லை?

Editorial   / 2019 ஏப்ரல் 03 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ​தொழிலாளர் தினம் பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று(03) நடைபெற்ற ​ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து தொழிலாளர் தினத்தை கொண்டாட தீர்மானித்துள்ளது. இதன்படி ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவும், பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

அதிக வெப்பமான வானிலை தொடருமாக இருந்தால், தொழிலாளர் தினத்தில் பேரணி நடத்தப்படாதெனவும் தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இதுவரையில் அழைப்பு விடுக்கப்படவில்லை. எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இதில் இந்நிகழ்வில் கலந்துகொள்வார்  எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .