Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜனவரி 20 , பி.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டில் இல்லாமையினால், நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது, எரிபொருட்களின் விலைச் சூத்திரம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவில்லை என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
உலக சந்தையில், கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதைத் தொடர்ந்து, அதன் பயனை இலங்கை மக்களுக்கும் வழங்குவதற்காக, எரிபொருள்களுக்கு புதிய விலைச் சூத்திரமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதற்கான அனுமதியினை, அமைச்சரவையிடமிருந்து பெறவேண்டும்.
இந்த அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் நேற்று சமர்ப்பிக்க இருந்த போதிலும், உலக பொருளாதார ஒன்றுகூடலில் கலந்துகொள்வதற்காக பிரதமர் விக்கிரமசிங்க, சுவிட்ஸர்லாந்துக்கு சென்றுள்ளதால், பத்திரத்தை சமர்ப்பிக்க முடியாமல் போனது என அமைச்சர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .