Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகலில் எதிர்வரும் 04ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது மாநாட்டில் பங்கேற்குமாறு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாநாட்டை நடத்தும் இடம் மற்றும் திகதி தொடர்பில் தீர்மானிக்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு கடிதம் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ள தமக்கு அழைப்பு கிடைக்கவில்லை என்று தெரிவித்திருந்தனர்.
இது குறித்து கேட்டபோது, சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
35 minute ago
56 minute ago
2 hours ago