2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சேயா வழக்கு: இன்று முதல் தொடர் விசாரணை

Gavitha   / 2016 ஜனவரி 25 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா, கொட்டதெனியாவ பகுதியில் ஐந்து வயது சிறுமியான சேயா சந்தவமி பக்மீதெனிய படுகொலை தொடர்பான வழக்கு, இன்று முதல் தினசரி விசாரணைக்கு எழுத்துக்கொள்ளப்படும் என்று நீர்கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஷம்பா ஜானகி ராஜரத்ன இன்று அறிவித்தார்.

ட்ரையல் அட் பார் முறையில் நடைபெற்று வரும் இந்த வழக்கு, விசேடமான வழக்காக கருதப்படுவதாக, கடந்த மாதத்தில் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

கடந்த செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதியன்று காணாமல் போன சேயா சத்தவமி இரண்டு நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியை வண்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், கடந்த ஒக்டோபர் மாதம் சமன் ஜயதிலக்க என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X