2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

செவ்வாயன்று ஆஜராகுமாறு ஹிருணிகா எம்.பிக்கு உத்தரவு

Kanagaraj   / 2016 ஜனவரி 09 , பி.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளைஞனை கடத்திய குற்றச்சாட்டில் கொழும்பு குற்றப்பிரிவினாரால் நேற்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, கொழும்பு நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலேயே அவர், விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான், நேற்று உத்தரவிட்டுள்ளார்.

தெமட்டகொடை பிரதேசத்தில் நபரொருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இவர், கொழும்பு குற்றப்பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X