2025 ஜூன் 11, புதன்கிழமை

சஜித், அநுர கட்சிகள் விடுத்துள்ள அறிவிப்பு

Nirosh   / 2022 மே 01 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தில் தாம் ஒருபோதும் இணையப்போவதில்லை என சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, அநுர தலைமையிலான தேசிய மக்கள் முன்னணி என்பன அறிவித்துள்ளன.

சர்வமதத் தலைவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, நம்பிக்கைக்குரிய ஜனாதிபதி ஒருவரின் கீழேயே இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும். எனினும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது எமக்கு நம்பிக்கை இல்லை. எனவே அவருடன் இ​டைக்கால அரசாங்கத்தில் இணையப்போவதில்லை என்றார். 

நாடு தற்போது முகங்கொடுக்கம் பிரச்சினைகளை ஜனாதிபதியே உருவாக்கியதாக இதன்போது தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், அரசாங்கத்தையும், ஜனாதிபதியும் பதவி விலக வேண்டுமென்றே மக்கள் கோருகிறார்கள். எனவே ஜனாதிபதியுடன் இணைந்து ஒருபோதும் இடைக்கால அரசாங்கத்தை  அமைக்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார். 

நாட்டின் தற்போ​தைய நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வு வேண்டுமாக இருந்தால் உடனடியாக தேர்தல் ஒன்றுக்கு செல்வதே சரி​ எனவும் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10