2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

சஜித்துக்கு பதில் கடிதம் அனுப்பினார் ஜனாதிபதி

Freelancer   / 2022 மே 13 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

4 நிபந்தனைகளுக்கமைய, ஐக்கிய மக்கள் சக்தி முதன்மையாகக் கொண்ட அனைத்துக்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியின் கீழ் இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கும், ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவர் என்ற வகையில் பிரதமர் பதவியை ஏற்கவும் தான் தயாராக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இன்று ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதன்படி, இந்த கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி இவ்வாறு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதில், ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கான தீர்மானத்தை மாற்ற முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தற்போது நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பது நாட்டுக்கான நலனாக அமையும் எனவும், எதிர்காலத்தில் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த எவரேனும் இணைத்துக் கொள்ள வேண்டுமாயின் உடனடியாக தமக்கு அறிவிக்குமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

9 hours ago - 0     - 9

‘படை தலைவன்’

9 hours ago - 0     - 9

மன்னிப்பு

9 hours ago - 0     - 8

‘மெஜந்தா’

9 hours ago - 0     - 7