2025 ஜூன் 09, திங்கட்கிழமை

சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது

Freelancer   / 2024 டிசெம்பர் 23 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கோப்பாய் மத்தி பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி இடம்பெறுகின்றது என யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்துச் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், இருவரைக் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 10 லீற்றர் சட்டவிரோத மதுபானத்தையும் மீட்டனர்.

மீட்கப்பட்ட சட்டவிரோத மதுபானத்துடன் கைது செய்யப்பட்ட நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காகக் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

41 minute ago - 0     - 2

‘படை தலைவன்’

44 minute ago - 0     - 4

மன்னிப்பு

46 minute ago - 0     - 2

‘மெஜந்தா’

49 minute ago - 0     - 2