2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

Freelancer   / 2024 மே 06 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.

பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இம்முறை 3 லட்சத்து 87 ஆயிரத்து 648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65 ஆயிரத்து 331 தனியார் விண்ணப்பதாரர்களுமாக மொத்தமாக 4 லட்சத்து 52 ஆயிரத்து 979 பரீட்சார்த்திகள் நாடளாவிய ரீதியில் 3 ஆயிரத்து 527 பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

இதேவேளை விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளுக்காக விசேட பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன என  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.  (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .