2025 ஜூன் 18, புதன்கிழமை

சபையில் பெரும் கூச்சல்: சபை அதிரடியாக ஒத்திவைப்பு

Editorial   / 2025 ஜூன் 18 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்த ஒத்திவைப்பு விவாதத்தை முன்மொழியவிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இல்லாததால், இன்றைய பாராளுமன்ற அமர்வுகள் திடீரென முடிவுக்கு வந்தன.

பாராமன்ற உறுப்பினர் நிஜாம் காரியப்பர் பிரேரணையை முன்மொழியத் தொடங்கியதை அடுத்து, சபை ஒத்திவைக்கப்பட்டது.

ஒரு உறுப்பினர் சார்பாக மற்றொரு உறுப்பினர் ஒரு தீர்மானத்தை முன்மொழிய முடியாது என்று சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்கவும் அமைச்சர் விஜித ஹேர்த்தும் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி சபையை, நாளை (19) காலை 9.30 வரை ஒத்திவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .