2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

சபைக்கு நடுவே வாக்குப்பெட்டி: விசேட மணி ஒலிக்கிறது

Editorial   / 2022 மே 05 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இரகசிய வாக்கெடுப்பு இடம்பெறவிருப்பதால், சபைக்கு நடுவே, வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்களிப்பதற்காக உறுப்பினர்களை சபைக்குள் அழைப்பதற்கான அழைப்பு மணி ஒலிக்கப்படுகின்றது. இந்த மணி, 5 நிமிடங்களுக்கு ஒலிக்கும்.

அதற்கிடையில், வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், முன்னாள் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா முன்மொழிய, சுசில் பிரேமஜயந்த எம்.பி வழிமொழிந்தார்.

எதிரணியின் சார்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்காரின் பெயர் முன்மொழியப்பட்டது. ரஞ்சித் மத்தும பண்டார முன்மொழிய, லக்ஷ்மன் கிரியெல்ல வழிமொழிந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7