Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Simrith / 2024 டிசெம்பர் 23 , பி.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் தமது சொந்த பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கட்டணத்துடன் பிரத்யேக வகுப்புகளை நடாத்துவதற்கு தடை விதித்து அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்தத் தடை பாடசாலை நேரம், பாடசாலைக்கு பிறகு, வார இறுதி நாட்கள் அல்லது பொது விடுமுறை நாட்களுக்குப் பொருந்தும் னஎத் தெரிவிக்கபட்டது.
இவ்விடயம் தொடர்பில் மீளாய்வு மற்றும் கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்படும் வரை, சுற்றறிக்கையை இடைநிறுத்துமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
மேல்மாகாண கல்விச் செயலாளர் கே.ஏ.டி.ஆர்.நிஷாந்தி ஜயசிங்க கையொப்பமிட்ட இந்த சுற்றறிக்கை கல்விப் பணிப்பாளர், பிராந்திய பணிப்பாளர்கள், பிரதேச கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்றும், மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
15 minute ago
18 minute ago
35 minute ago