2025 மே 19, திங்கட்கிழமை

சாரதிகளுக்கு விசேட அறிவுறுத்தல்

S.Renuka   / 2025 மே 19 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் போது, வாகன சாரதிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வீதி மேம்பாட்டு ஆணையம் (RDA) வலியுறுத்தியுள்ளது.

விபத்துகளைத் தடுக்க இதுபோன்ற சூழ்நிலைகளில் மணிக்கு 60 கிலோ மீட்டராக வேகத்தைக் கட்டுப்படுத்துமாறு அதிவேகப் பாதை செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புப் பிரிவின் துணைப் பொது முகாமையாளர் ஆர்.ஏ.டி.கஹடபிட்டிய ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தினார்.

வீதி மேம்பாட்டு ஆணையம் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகிறது.

மேலும், அனைத்து அதிவேகப் பாதை பயனர்களும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க ஊக்குவிக்கிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X