2025 ஜூன் 19, வியாழக்கிழமை

சருகு புலி பாதுகாப்பாக மீட்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 05 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில் பொதுமக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்த சருகு புலி பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இலங்கையில் அழிந்துவரும் உயிரினமாகவும் பாதுகாக்கப்படவேண்டிய இனமாகவும் காணப்படுகின்ற சருகுபுலியானது அண்மைக்காலமாக விபத்துகளில் உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்துவருகின்றன.

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் பெரியகல்லாறு பகுதியில் நேற்று (05) இரவு விபத்தில் சிக்கிய சருகு புலியொன்று மக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்ததினால் அங்கு மக்கள் மத்தியில் அச்ச நிலையேற்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .