2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

சர்வதேச விசாரணையை ‘இந்தியாவே தடுகிறது’

Editorial   / 2019 ஏப்ரல் 05 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்  

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை இந்தியாவே தடுத்து வருகின்றதெனத் தெரிவித்த வடக்கு, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள், இந்தியா, எந்த விதத்திலும் உதவாது. மாறாக அதனைத் தடுப்பதில் மும்முரமாக பணியாற்றும் என்றார்.

யாழ்ப்பணத்தில் உள்ள அவரது இல்லத்தில், நேற்று (04) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

இலங்கை தொடர்பான விடயம் ஜெனீவாவில் பேசப்பட்டபோது, 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறே இந்தியா கூறிவருகின்றது எனத் தெரிவித்த அவர், இதனையே ஆரம்பக்காலத்திலிருந்து கூறி வருகின்றது என்றார்.  

அதற்கு அப்பால் ஏனைய விடயங்களில் இந்திய அரசு கவனம் செலுத்துவதில்லை. அதற்காக, அவர்கள் தயாராகவும் இல்லை எனத் தெரிவித்த அவர், தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வரும் நிலையில், அவ்வாறான ஒரு விசாரணையை இந்தியா விரும்பவில்லை.அதனைத் தடுக்கும் முயற்சிகளையே செய்து வருகின்றது என்றார்.   

இந்திய அரசு, தனது தேசிய பாதுகாப்பு, நலனைக் கருத்திற் கொண்டே செயற்படுகின்றது. தமிழ் மக்களின் நலனை பார்க்கவில்லை எனத் தெரிவித்த அவர், இதனால் சர்வதேச விசாரணைக்கு இந்தியா எந்த விதத்திலும் உதவாது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .