2024 மே 17, வெள்ளிக்கிழமை

மோகம் 30 நாள்: ஆசை அறுபது நாள் ; இளைஞன் கைது

Mayu   / 2024 மே 02 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

14 வயதுடைய சிறுமி ஒருவருடன் இரண்டு மாதங்கள் தங்கியிருந்த  18 வயதுடைய இளைஞனும்  அவருக்கு உதவிய மேலும்  மூவரையும் அலவத்துகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அலவத்துகொடை பொலிஸ் பிரிவில் வசிக்கும் பெண் ஒருவர் கடந்த பெப்ரவரி மாதம் 27 ம் திகதி இரவு முதல் 14 வயதுடைய தனது பேத்தி காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய பொலிஸார்  குறித்த சிறுமி தனது காதலனுடன் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், புதன்கிழமை (01) குறித்த சிறுமி பொலிஸ் நிலையத்திற்கு   தனது பாட்டியுடன் வந்து, தனது 18 வயதுடைய காதலனுடன் சென்று மாத்தளை பிரதேசத்தில் இரு மாதங்களாக வீட்டில் தங்கி இருந்ததாக கூறியுள்ளார்.

இதற்கமைய, 14 சிறுமியுடன் தங்கியிருந்த குற்றத்திற்காக 18 வயதுடைய காதலனையும் அவருக்கு உதவிய மாத்தளை பிரதேசத்தில் அமைந்துள்ள இரு வீடுகளுடைய உரிமையாளர்களும் மற்றுமொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை  வியாழக்கிழமை (02) கண்டி நீதவான் முன் ஆஜர் செய்யப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆஸிக்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .