2026 பெப்ரவரி 05, வியாழக்கிழமை

சிறுவனின் தலையில் விழுந்த சீமெந்து கலவை

Freelancer   / 2026 பெப்ரவரி 05 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - முகத்துவாரம் ஹெலமுத்து செவன அடுக்குமாடியில் இருந்து சீமெந்து கலவை உடைந்து விழுந்ததில் 7 வயது சிறுவன் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முகத்துவாரத்திலுள்ள ஹெலமுத்து செவன தொடர்மாடி குடியிருப்பின் 07ஆவது மாடியின் 02 வீடுகளுக்கு இடையில் காணப்பட்ட சீமெந்து கலவை நேற்று(04) காலை உடைந்து வீழ்ந்துள்ளது.

இதன்போது கடைக்கு சென்ற 7 வயதான சிறுவனின் தலையில் இந்த சீமெந்து கலவை  வீழ்ந்துள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவன் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

ஹெலமுத்து செவன தொடர்மாடி குடியிருப்பு 2019ஆம் ஆண்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X