2024 மே 02, வியாழக்கிழமை

சில பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு

J.A. George   / 2024 ஏப்ரல் 19 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்புகஸ்கந்தை மின்சாரத் தொகுதியில் அவசர திருத்தப் பணிகள் காரணமாக கம்பஹாவில் புதன்கிழமை (24) காலை 8.30 மணிக்கு முதல் 12 மணித்தியால நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

அவசர திருத்தப்பணிகள் காரணமாக பியகம நீர் சுத்திகரிப்பு பிரிவுக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என அந்த சபை கூறியுள்ளது.

இதனால் பேலியகொட, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகரசபை பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொட மற்றும் கம்பஹா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .