2025 ஜூன் 02, திங்கட்கிழமை

சில்லில் தலை நசுங்கி மனைவி பலி: கணவன் படுகாயம்

Editorial   / 2025 ஜூன் 01 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று, தம்பதியினர் பயணித்த  மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மனைவி உயிரிழந்ததாகவும், கணவர் படுகாயமடைந்ததாகவும் பயாகலை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர், மஹாவில, மஹவத்த, ஹபுருகல பகுதியைச் சேர்ந்த சி. சுசிலாவதி என்ற பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேருவளையில் இருந்து களுத்துறை நோக்கி ஞாயிற்றுக்கிழமை (01)  காலை மோட்டார் சைக்கிளில் தம்பதியினர் பயணித்துள்ளனர்.

 அதே திசையில் பயணித்த பேருந்து ,மோட்டார் சைக்கிளில் மோதியதில், பெண்ணின் தலை முன் இடது சக்கரத்தின் கீழ் நசுங்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .