2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சஹ்ரானின் சகா தடுத்துவைப்பு

Editorial   / 2019 ஜூன் 17 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

 

தேசிய தௌஹீத் ஜமாஆத் அமைப்பின் தலைவரான தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாசீமுடன் தொடர்பை பேணிவந்தார் என்ற சந்தேகத்தில், வெலிமடையில் வைத்து  நேற்று (16)  கைதுசெய்யப்பட்ட நபரை, 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு நீதமன்றம் அனுமதியளித்துள்ளதாக, வெலிமடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.எஸ்.ஹேரத் தெரிவித்தார்.

வெலிமடை - பொரகஸ் சீல்மியாபுர புதுர்திஸா மாவத்தையைச்  சேர்ந்த, 21  வயது நபரே, இவ்வாறு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

அவர், சஹ்ரானின் போதனை வகுப்புகளில் பங்குபற்றினார் என்றும், மாவனெல்லையில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடைய சந்​தேநகபர்களுடன் நேரடி தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்றும், விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேற்படி நபர்,  நாளை (17) மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .