2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சஹ்ரானின் மற்றுமொரு பயிற்சி முகாம் நுவரெலியாவில்

Editorial   / 2019 மே 06 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரமேஸ், டி.ஷங்கீதன், டி.சந்ரூ, எம்.கிருஸ்ணா, எஸ்.கணேசன்

நுவரெலியா பிளக்பூல் பாடசாலைக்கு அருகிலுள்ள இரண்டு மாடிக் கட்டடம், பொலிஸார் தலைமையிலான படையினரால், இன்று(06) சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அம்பாறை, சாய்ந்தமருது பிரதேசத்தில், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் வழங்கிய தகவலையடுத்தே, இந்த கட்டடம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த கட்டடத்தில், தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரும் 

கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியுமான சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட 36 பேர் பயிற்சி பெற்றுள்ளனரென, விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கட்டடத்திலேயே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான இறுதி பயிற்சி, ஏப்ரல் 17ஆம் திகதியன்று ஒத்திகை பார்க்கப்பட்டதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .