2025 ஜூன் 25, புதன்கிழமை

சஹ்ரானின் விரிவுரைகளடங்கிய 135 இறுவட்டுகள் மீட்பு

Editorial   / 2019 மே 26 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாதம்பே உள்ள பாடசாலையொன்றின் அலுவலகத்திலிருந்து தௌஹீத் ஜமாஅத் அமைப்பினரின் இலங்கைத் தலைவரும், இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியுமான சஹ்ரானின் விரிவுரைகள் அடங்கிய மடிக்கணினியொன்றும், 135 இறுவட்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் குறித்த பாடசாலையின் பொறுப்பாளரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து, சிலாபம் – மாதம்பே பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே, குறித்த பாடசாலையிலிருந்து இவை மீட்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .