2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம்

Editorial   / 2019 ஜூன் 22 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பிரகாரம், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் இருவர் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சேவையின் அவசியம் கருதியே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த வகையில், மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இது தவிர 04 பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், 02 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், 04 பொலிஸ் அத்தியட்சகர்கள், சில சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .