Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 22 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில், சிறைவாசம் அனுபவித்து வரும் 46 பெண்களுடைய பிள்ளைகளும் சிறைச்சாலைக்குள்ளேயே தங்கும் நிலைமை காணப்படுவதால், அவ்வாறான சிறுவர்களை உடனடியாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொலைபேசி மூலம் தெரிவித்துளாரெனவும் கூறப்படுகிறது.
கர்பிணிகளாக இருக்கின்ற போதும், பிள்ளை பிறந்த சில நாள்களில் சிறைக்குச் சென்ற தாய்மார்களின் பொறுப்பில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் விடப்பட்ட 46 பிள்ளைகள் இருப்பதாகவும், இவர்கள் சகலரும் 5 வயதுக்கு உட்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதனால், மேற்படி பிள்ளைகளை விடுவிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், அது தொடர்பான தகவல்களை விரைவில் பிரதமருக்கு அறிவிக்க உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
1 hours ago