2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

சிலாபத்தில் ஒருவருக்கு கொரோனா

Editorial   / 2020 செப்டெம்பர் 19 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனமடுவ பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 16 ஆம் திகதி டுபாயிலிருந்து வந்த இவருக்கு தொற்று இருப்பதாக ​உறுதி செய்யப்பட்டு வெலிகந்த வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றி அனுப்பட்டிருந்ததுடன், அங்கு அவருக்கு மூன்று தடவைகள் பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ள நிலையில் 3 ஆவது முறையும் தொற்று இருப்பதாக உறுதிபட செய்யப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 

அதனையடுத்து அவரை கடந்த 24 ஆம் திகதி முதல் அவருடைய வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு ஆளாகுமாறு அறிவுருத்தி 10 ஆம் திகதி வெலிகந்தை வைத்தியசாலையிலிருந்து அனுப்டபட்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

அவரை 17 ஆம் திகதி அவசர நோய் சிகிச்சை பிரிவில் அனுமதித்திருந்த போது இவருக்கு கொரோன தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு ஆளாகியிருந்த காலப்பகுதியில் அவருடைய தயாரும் அந்த வீட்டில் இருந்தமையால் அவரையும் பிசிஆர் பரிசோதனைக்கு  உட்படுத்த தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .