2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு தொடர்கிறது

Editorial   / 2019 ஜூலை 20 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலையால், பல மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் பாதிப்பு இடம்பெற்றுவருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட அனர்த்த சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில், தற்போதைக்கு சீரான வானிலை நிலவினாலும், பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் இருப்பதாகவும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று இரவு 9.00 மணி வரை இந்த சிவப்பு எச்சரிக்கை அமுலில் இருக்கும் என்றும் அனர்த்த நிலைமைகள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்துக்கும் பொலிஸாருக்கும் அறிவிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், 0112454576 அல்லது 0112587229 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி தொடர்புகொள்ள முடியும் என்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்து பொதுமக்களுக்கு உரிய தகவல்களை வழங்குவதற்காக 20 பொலிஸ் நிர்வாகப் பிரிவுகளில் 149 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .