2025 ஜூலை 16, புதன்கிழமை

சுகயீன விடுமுறை போராட்டம் கைவிடப்பட்டது

Editorial   / 2019 ஏப்ரல் 28 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஆசிரியர் சங்கத்தால் முன்னெடுக்கப்படவிருந்த சுகயீன விடுமுறை போராட்டமானது கைவிடப்பட்டுள்ளதாகக் குறித்த சங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மே மாதம் 9ஆம், 10ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவிருந்த குறித்த போராட்டமானது, கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களால் நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையின் காரணமாகவே இந்த போராட்டம் கைவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, குறித்த சங்கத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X