Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 29 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மருந்துப்பொருள்களையும் நவீன மருத்துவ உபகரணங்களையும் கொள்வனவு செய்யும்போது, அதன் மூலம் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பார்க்கிலும் பெரும் நிதி மோசடிகள் இடம்பெறுவது மேலைத்தேய மருத்துவ துறையிலுள்ள பெரும் பிரச்சினையாகும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மன்னம்பிட்டி கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலையின் புதிய வாட்டுத் தொகுதியை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, நேற்று (28) பிற்பகல் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
மன்னம்பிட்டி கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலையில் இருந்து வந்த நீண்டகால குறைபாடொன்றை நிவர்த்தி செய்யும் வகையில் “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வாட்டுத் தொகுதிக்கு 165 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
28 கட்டில்களைக் கொண்ட இவ்வாட்டுத் தொகுதி, வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.
அங்கு தொடர்ந்துரைத்த ஜனாதிபதி, தமது ஆயுர்வேத மற்றும் சுதேச மருத்துவ முறைமையானது பெறுமதி வாய்ந்த ஒன்றாகும் என்றும் மேலைத்தேய மருத்துவ விஞ்ஞானம் எவ்வளவு முன்னேற்றமடைந்தபோதும் எமது நாட்டின் சுதேச மருத்துவ முறைமையின் பெறுமதியை மிகைக்க முடியாதிருப்பதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .