2025 ஜூன் 16, திங்கட்கிழமை

செட்டிகுளம் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Editorial   / 2020 ஜூலை 01 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில், ஓட்டோ மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து செட்டிகுளம் துடரிக்குளம் பாதுகாப்பற்ற ரயில் கடவைப்பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர், தனது முச்சக்கவண்டியில் செட்டிகுளம் பகுதியில் இருந்து துடரிக்குளம் நோக்கி சென்றுகொண்டிருந்த போதே  விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் செட்டிகுளம் முதலியார் குளம் பகுதியை சேர்ந்த சகீது என்று அழைக்கப்படும் மௌலவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளதுடன், விபத்து தொடர்பாக செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .