2025 ஜூன் 19, வியாழக்கிழமை

சொகுசு பஸ் குடைசாய்ந்து விபத்து: ஐவர் வைத்தியசாலையில்

Editorial   / 2020 செப்டெம்பர் 07 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த

தனியார் பஸ் ஒன்று கெப் வாகனமொன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில், ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம்- அநுராதபுரம் வீதியின், சாலியவெவ பகுதியில், நேற்று (06) இரவு இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி, அதிக வேகத்தில் பயணித்த  சொகுசு பஸ் ஒன்று,  வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்க கெப் வாகனத்தை மோதி தள்ளி,  குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக, ​சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின்போது, பஸ்ஸில் 23 பேர் பயணித்துள்ளனர் எனினும்,  ஐவர் மாத்திரமே காயமடைந்துள்ளனரென,  பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த ஐவரும் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் மூவரின் நிலை க​வலைக்கிடமாக உள்ளதால், மேலதிக சிகிச்சைக்காக,  அவர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .