2025 ஜூன் 09, திங்கட்கிழமை

ஜெயராஜ் படுகொலை: 8 வருடங்களின் பின் முதல் சாட்சியம் பதிவு

Kanagaraj   / 2016 ஓகஸ்ட் 08 , பி.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா, வெலிவேரிய காந்தி விளையாட்டு மைதானத்துக்கு முன்பாக, 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் திகதியன்று, தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் போது, முன்னாள் அமைச்சர் மறைந்த ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கு, 8 வருடங்களின் பின்னர், நேற்றுத் திங்கட்கிழமை (08), விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கம்பஹா மேல் நிதிமன்ற நீதிபதி கேமா சுவர்ணாதிபதி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கு விசாரணையின் போது, ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஹெக்டர் தர்மரத்ன, முதல் சாட்சியத்தை வழங்கினார்.

செல்வராஜா பிரபாகரன், முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே மற்றும் தம்பையா பிரசாத் ஆகியோரை பிரதிவாதிகளாகக் கொண்ட இந்த வழக்கு, எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கம்பஹா வெலிவேரிய பகுதியில் உள்ள, வெலிவேரிய காந்தி விளையாட்டு மைதானத்துக்கு முன்பாகவுள்ள வெலிவேரிய - புதிய கண்டி பிரதான வீதியில் வைத்து, 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் திகதியன்று காலை 7.40க்கு இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில், அமைச்சர் உட்பட 15 பேர் பலியானதுடன் 96 பேர் படுகாயமடைந்திருந்தனர்.

2008ஆம் ஆண்டு, சிங்கள - தமிழ் புதுவருடத்தையொட்டி, வெலிவேரிய அதிர்ஷ்டான விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த விளையாட்டுப் போட்டியின் முன்னோடியாக, அன்றைய தினம் நடைபெறவிருந்த மரதன் ஓட்டப்போட்டியை ஆரம்பித்து வைப்பதற்கு, அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே, பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

மரதன் ஓட்டப்போட்டியை ஆரம்பித்துவைக்கும் பொருட்டு அமைச்சரிடம் கொடி வழங்கப்பட்டு, ஆரம்ப ஸ்தானத்திலிருந்து மரதன் ஓட்டப்போட்டியை ஆரம்பித்து வைப்பதற்காகக் கொடியைக் கீழே அசைத்த போதே, குண்டுவெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

1 hours ago - 0     - 2

‘படை தலைவன்’

1 hours ago - 0     - 4

மன்னிப்பு

1 hours ago - 0     - 2

‘மெஜந்தா’

1 hours ago - 0     - 2