2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஜனாதிபதி மீது கைக்குண்டுத் தாக்குதல்: மனைவி மீது குற்றஞ்சாட்டிய கணவன் கைது

Editorial   / 2025 ஜூன் 30 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கல்னேவ பொது அரங்கில் இன்று (30) நடைபெறவுள்ள உபசம்பத விழாவில் கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்த பெண் ஒருவர் தயாராகி வருவதாக பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவின் (119) அரச அதிகாரி ஒருவருக்கு தவறான தகவலை வழங்கியதாகக் கூறப்படும் நபரை ஜூலை 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கெகிராவ நீதவான் உதாரி குணசேகர உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளின் முன்னேற்றத்தைக் குறிக்கும் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இபலோகம பொலிஸாருக்கு நீதவான் மேலும் உத்தரவிட்டார்.

ஹிரிபிட்டியகம, இபலோகமவைச் சேர்ந்த மகேஷ் சதருவன் ரத்நாயக்க என்ற நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

கல்னேவயில் நடைபெற்ற நிகழ்வின் போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது கைக்குண்டுத் தாக்குதலை நடத்தும் நோக்கில் கைக்குண்டை மறைத்து வைத்திருந்த சந்தேக நபர், பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு தவறான தகவலை வழங்கிய சம்பவம் தொடர்பாக இபலோகம பொலிஸார் ஆரம்ப பீ அறிக்கை மூலம் நீதிமன்றத்திற்கு முன்னர் அறிக்கை அளித்திருந்தனர்.

சந்தேக நபர் தனது மனைவிக்கு அத்தகைய தவறான தகவலை வழங்கியதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளை கருத்தில் கொண்டு, சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் நோட்டீஸ் பிறப்பித்திருந்தார்,

மேலும் அந்த நோட்டீஸின்படி, சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜரானபோது காவலில் வைக்கப்பட்டார். சந்தேக நபர் தனது மனைவி மீதுள்ள கோபத்தில் தவறான தகவல்களை வழங்கியதாகவும், ஜனாதிபதி அரசு நிகழ்வில் கலந்து கொள்வதால் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தில் பொலிஸார் கோரியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X