Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Freelancer / 2025 ஜூன் 26 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விடுதலை குறித்து அண்மையில் பல சர்ச்சைகள் எழுந்திருந்தன. அந்த வகையில் தற்போது மற்றுமொரு பிரச்சனையும் வெளிவந்துள்ளது.
இதில், முன்னாள் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவின் மனைவி மேரி ஜூலியட் மோனிகா பெர்னாண்டோவின் விடுதலையும், ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் துசார உப்புல்தெனியவின் வழக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, 2 பெண்களைக் கடத்தி கொலை செய்ததற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடமிருந்து ஜனாதிபதி மன்னிப்பைப் பெற்ற பின்னர், 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் மேரி ஜூலியட் மோனிகா பெர்னாண்டோ விடுவிக்கப்பட்டார்.
இது சர்வதேச மகளிர் தினத்துடன் தொடர்புடைய மன்னிப்பாக அறிவிக்கப்பட்டதாகச் சட்டமா அதிபர் திணைக்களம் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
41 minute ago
46 minute ago
1 hours ago