2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

’ஜனநாயகத்தை நாசம் செய்ய இடமளியோம்’

Editorial   / 2020 ஜூன் 11 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னிலை சோசலிசக் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது, பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டமைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, இது தொடர்பில் விரைவாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் ஜனநாயகத்தை நாசம் செய்ய எவருக்கும் இடமளிக்க முடியாது. பொலிஸாரால் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமெனவும் அவர் கூறினார்.

நாட்டில் கருத்துச் சுதந்திரம் காணப்படுகிறது. வீதிக்கு இறங்கி அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொள்ளுவதற்கான சுதந்திரமும் காணப்படுவதாகத் தெரிவித்த அவர், வௌ்ளை - கறுப்பு நிறவெறிக்கு எதிராக நாட்டு மக்கள் போராடும்போது, அவர்கள் தாக்கப்படுவது ஜனநாயக நாட்டில் நடைபெறாதவொன்று எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .