Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 13 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் இல்லாத நேரங்களில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் நாட்டின் பாதுகாப்புத் தொடர்பான எந்தவொரு தீர்மானங்களையும் எடுக்க முடியுமென, அரச தொழில் முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள், கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இன்று அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று, 9 மணித்தியாலங்கள் நிறைவடையும் முன்னர், குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய, தீவிரவாதக் குழுக்களை கைதுசெய்வதற்கான உத்தரவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே பிறப்பித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசமைப்புக்கு அமைய, ஜனாதிபதிக்கு அடுத்த நிலையில் பிரதமரே காணப்படுவதாகவும் பிரதமருக்கு சட்ட அதிகாரங்கள் இல்லாவிட்டாலும் அவர் தலையிட்டு, நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
22 minute ago
26 minute ago
2 hours ago