2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

‘ ஜனாதிபதி எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை ‘

Editorial   / 2019 ஏப்ரல் 07 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித்  தேர்தலில், ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நிறுத்துவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கு தேவைபாடு இருந்தாலும், இது  தொடர்பில் ஜனாதிபதி எவ்வித அறிவிப்பையும் இதுவரை  வெளியிடவில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியும் ஸ்ரீ லங்கா ​பொதுஜன பெரமுனவும் தனித்தனியாக ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்கினால் அது ஐக்கிய தேசிய கட்சிக்கு வாய்ப்பாக ​போய்விடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேப்போல் இரு தரப்பும் ஒரே ​வேட்பாளரை களமிறக்குவார்களானால் இரு தரப்பும் சில தியாகங்களை செய்ய வேண்டிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .