2025 ஜூன் 25, புதன்கிழமை

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு

Editorial   / 2019 மே 27 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில், ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்த ஆணைக்குழுவின் காலம் ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம், ஸ்ரீ லங்கன் கேட்டரிங் நிறுவனம், மிஹின் லங்கா தனியார் நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராய கடந்தாண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .