Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 18 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாவணர்களின் பாதுபாக்கை கருத்தில் கொண்டு வழங்கப்பட்டுள்ள பாடசாலை விடுமுறை மேலும் ஒரு காலம் நீட்டிப்புச் செய்யப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்தோடு, புலைமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த உயர்தர பரீட்சைகள் என்பன நடத்தப்படுவதற்கான புதிய தினங்கள் குறித்த தீர்மானம் ஜுலை 20 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இராஜாங்கணை , வெலிகந்த பகுதிகளிலுள் பாடசாலைகள் எவையும், ஓகஸ்ட் 5 ஆம் திகதிக்கு முன்னர் திறக்கப்பட கூடாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் எதிர்வரும் (20) திங்கட்கிழமை பாடசாலைகளை திறப்பதாக அறிவிக்கப்பட்ட தீர்மானத்தை இம்மாதம் 27 ஆம் திகதிவரையில் பிற்போடுவதாகவும் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதார அமைச்சுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது, சமூகத்துக்குள் தொற்று இல்லாத போதும் மாணவர்களை சமூகத்திலிருந்து வேறுபடுத்தி வைப்பது சிறந்ததெனவும், 200 க்கும் மேற்படிட்ட பாடசாலை மாணவர்கள் தனிமைப்படுத்தபட்டுள்ள நிலையில் அவர்களுடைய பிசிஆர் பரிசோதனை அறிக்கைகள் வெளிவரும் வரை மேற்படி நிலைப்பாட்டில் செயற்பட வேண்டியது அவசியமென சுகாதார அமைச்சு கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் கூறுப்படுகிறது.
அதன்படி தேர்தல் முடிவுற்ற பின்பு ஓகஸ்ட் 10 ஆம் திகதியன்றே பாடசாலைகளை திறப்பதற்கு பொருத்தமான தினமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago