2025 ஜூன் 19, வியாழக்கிழமை

ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 21 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (21) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசார​ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி வழக்கை மீண்டும் விசாரணைக்கு  எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அன்றைய தினம் சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரை வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய போது சதொச நிறுவனத்தின் 153 ஊழியர்களை அரசியல் செயற்பாடுகளில் ஈடுப்படுத்தி 4 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக கடந்த அரசாங்கத்தால்  இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .