2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஞானசாரர் விடுதலை?

Editorial   / 2019 மே 21 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர், இன்று அல்லது நாளைய தினம் விடுவிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஞானசார தேரரை, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைளை, சட்ட மா அதிபர் திணைக்களம் முன்னெடுத்து வருவதாகவும், அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நீதிமன்ற அவமதிப்பிலேயே ஞானசரர் தேரர் சிறைத் தண்டனை அனுபவித்து வருவதால், அவரை பொதுமன்னிப்பில் விடுதலை செய்வது, நீதிமன்றத்தை அவமதிப்பதாக அமையுமென, ஞானசாரரால் நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்தப்பட்ட பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.

மேலும், ஞானசரரின் விடுதலை தனக்கு அச்சுறுத்தலாக இருந்தால் அதற்கு எதிராக மீண்டும் தான் நீதிமன்றம் செல்வதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .