2025 ஜூன் 09, திங்கட்கிழமை

டலஸூக்குப் பச்சைக்கொடி, பிரசன்னவுக்குச் சிவப்புகொடி: முதலமைச்சர் ஆருடம்

Kanagaraj   / 2016 ஓகஸ்ட் 08 , பி.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொள்வதற்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க நீக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளதாக, மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, தெரிவித்தார்.

மேல் மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில், நேற்றுத் திங்கட்கிழமை (08) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது, தொடர்ந்து கருத்துரைத்த அவர், 'எந்தவொரு காரணமும் இல்லாமல், கட்சியை விமர்சனத்துக்கு உட்படுத்த வேண்டிய தேவை, எவருக்கும் இல்லை. அவ்வாறானவர்கள் தொடர்பில் முடிவெடுப்பதற்கு, அவர்களின் பிரபல்யமோ அல்லது அதிக வாக்குகளோ தடையாக அமையாது' என்றார்.

அத்துடன், 'ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த மேலும் சிலர், அரசாங்கத்துடன் இணைந்துகொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இந்தப் பேச்சுவார்த்தைகள், சாதகமான நிலையையே தற்போது எட்டியுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், கட்சியின் கடிதங்களைத் தீக்கிரையாக்கிய உள்ளூராட்சிமன்ற முக்கியஸ்தர்கள் இருவரும், தேர்தலில் போட்டியிடுவதற்கான நேர்முகத் தேர்வுக்காக, சுதந்திரக் கட்சித் தலைமையகத்துக்கு வந்திருந்தனர்' என்றும் முதலமைச்சர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

51 minute ago - 0     - 2

‘படை தலைவன்’

54 minute ago - 0     - 4

மன்னிப்பு

56 minute ago - 0     - 2

‘மெஜந்தா’

59 minute ago - 0     - 2