2025 ஜூன் 23, திங்கட்கிழமை

டொக்டர் சாஃபிக்கு எதிராக ஆயிரம் முறைப்பாடுகள்

Editorial   / 2019 ஜூன் 17 , பி.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் டொக்டர் மொஹமட் சாஃபிக்கு எதிராக, இதுவரையில் ஆயிரத்து 3 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, குருநாகல், தம்புளை வைத்தியசாலைகளிலேயே, இத்தனை முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குருநாகல் போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய மொக்டர் சாஃபி, ஆயிரக்கணக்கான பெண்களுக்கு, கர்ப்பத் தடுப்புக்கான சத்திர சிகிச்சையை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருந்த நிலையில், சட்டவிரோதமான முறையில் பணத்தைச் சேகரித்தார் என்ற குற்றச்சாட்டின் ​கீழ், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால், ஏப்ரல் 25ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .