2025 ஜூலை 14, திங்கட்கிழமை

டொல்பினை பிடித்த மீனவர் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த

டொல்பின் ஒன்றை பிடித்து, படகிலேயே அதனை வெட்டி விற்பனைச் செய்வதற்காக சிலாபம் மீன் சந்தைக்கு ​கொண்டுவந்த மீனவர் ஒருவரை, சிலாபம் பொலிஸார் இன்று (22)கைது செய்துள்ளனர்.

சிலாபம்-ரத்னஉயன பகுதியைச் சேர்ந்த, 22 வயதுடைய மீனவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மீனவரிடமிருந்து, வெட்டப்பட்ட நிலையில் 24 கிலோ கிராம் நிறையுடைய டொல்பின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரை, சிலாபம் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .