2025 ஜூன் 09, திங்கட்கிழமை

தெற்கில் காணாமல் போனோரையும் கண்டுபிடிக்க கோரிக்கை

Kanagaraj   / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

'காணாமற்போனோரைக் கண்டுபிடிப்பதற்காக அலுவலகமொன்று நிறுவப்படுமாயின், வடக்கைப் போன்று, தெற்கிலிருந்தும் காணாமற் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை, அந்த அலுவலகம் மேற்கொள்ள வேண்டும்' என்று, ஜாதிக்க ஹெல உறுமய கட்சி கோரியுள்ளது.

காணாமற்போனோரைக் கண்டுபிடிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், யுத்த காலத்தின் போதும் அதன் பின்னரும் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 11 ஆயிரத்துக்கும் அதிகமான முன்னாள் போராளிகளிடத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நிஷாந்த

ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

குருநாகலில் நடைபெற்ற ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் தேசிய ஒன்றுகூடல், நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

1 hours ago - 0     - 2

‘படை தலைவன்’

1 hours ago - 0     - 4

மன்னிப்பு

1 hours ago - 0     - 2

‘மெஜந்தா’

1 hours ago - 0     - 2