2025 ஜூன் 23, திங்கட்கிழமை

த.வி.கூவிலிருந்து இருவர் நீக்கம்

Editorial   / 2019 ஜூன் 22 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழர் விடுதலைக் கூட்டணியின் கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் இருவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

காத்தமுத்து கணேசன், சுமித்திரா ஜெகதீசன் ஆகியோரே, கட்சியின் சகல உறுப்புரிமைகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் செயலாளர் நாயகம்
வீ. ஆனந்தசங்கரி அறிக்கை ஒன்றினூடாக அறிவித்துள்ளார்.

கட்சிக்கு எதிரான செயற்பாடுகளிலும் கட்சியின் கொள்கைகளுக்கு முரணான வகையிலும் செயற்படுவதால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வீ. ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் இருவரையும் கல்முனை மாநகரசபை உறுப்பினர் பதவிகளில் இருந்து விரைவில் நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .