2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

’தடுப்பு முகாமிலிருந்து தப்பித்தோர் தேசத் துரோகிகளாக கருதப்படுவர்’

Gavitha   / 2020 மார்ச் 19 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து, தங்களை தடுப்பு முகாமுக்கு அனுப்ப வேண்டாம் என்று ஆர்ப்பாட்டம் செய்வோர், தனிமைப்படுத்தும் மய்யங்களிலிருந்து தப்பியோடுவோர் ஆகிய அனைவரும், தேசத் துரோகிகளாக கருதப்படவேண்டும் என போக்குவரத்து சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலைமைக்கு, அவர்களே காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர், ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டோருக்கு எதிரான சட்டநடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும் என்றும் நாட்டின் தற்போதைய நிலைக்கு, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டோரே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முப்படையினர், சுகாதார சேவையினரின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய அவர், மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும்போது, நம் நாட்டிலுள்ள முப்படையினரும் சுகாதார சேவர்களுமே, மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .