Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 03, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 ஜூன் 01 , பி.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளவில் பகுதியில் ஆலயத்திற்காக தாமரை இலை பறிப்பதற்காக தாமரை குளத்தில் இறங்கிய இருவர் நீரில் மூழ்கிய நிலையில் உயிரிழந்துள்ளனர்
ஞாயிற்றுக்கிழமை மதியம் 11:30 மணி அளவில் குளத்தில் இறங்கி இருவரும் நீரில் மூழ்கிய நிலையில் கிராம மக்களின் முயற்சியின் பயனாக இருவரும் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட போதும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தரப்பு தெரிவித்துள்ளது.
அளம்பில் தாமரை குளத்தில் தாமரை இலை பறிக்க சென்ற அளம்பில் வடக்கை சேர்ந்த 25 வயதுடைய ராஜசேகர் நிசாந்தன் மற்றும் பத்து வயதுடைய சிவநேசன் பிரணவன் ஆகிய இருவருமே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்
இவர்களின் உடலும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்(a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago